Showing posts with label கத்தோலிக்க பெந்தக்கோஸ்து சபை. Show all posts
இறை அரசின் நற்குடும்பம்
I. சில வேத பகுதிகள் :
- குடும்பம் திருமண நிறைவை பெறும் இடம் - இ.ச. 24:5.
- இறைவனின் இரக்கச் செயல்களைப் பறைசாற்றும் இடம் குடும்பம் - மாற் 5:19.
- பிள்ளைகள் ஒழுக்க நெறியில் வளர்க்கப்பட வேண்டிய இடம் குடும்பம் - லேவி 19:29.
- பெற்றோர், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லாருமே பேணப்பட வேண்டிய இடம் குடும்பம் - 1திமொ 5:4.
- மனைவியர், தாய்க்குரிய கடமைகளைச் செய்து, இல்லற மகிமையை வளர்க்கும் இடம் குடும்பம் - தீத் 2:4-5.
- கணவனின் உழைப்பு, குடும்பத்தை பேண – தொ.நூ 30:30.
- கணவன் எங்கே உழைக்கச் சென்றாலும், பாசத்தோடு திரும்பிச் செல்லும் இடம் குடும்பம் - தொ.நூ 31:30.
- கணவன் எங்கிருந்தாலும், நாடும் வீடும் அவன் நினைவில் நிறைந்திருக்கும் - எண் 10:30.
- மூதாதையர் வாழ்ந்து மடிந்த குடும்பத்தோடு தானும் இருந்து வாழ்வை முடிக்க விரும்புவது குடும்ப பற்று – 2சாமு 19:37.
- எந்த காலத்திலும், தாம் பிறந்து வளர்ந்த இடத்தையும், குடும்பத்தையும் எண்ணி ஏக்கம் கொள்வது குடும்ப உறவு – தி.பா 137:1-6.
- கணவன் மனைவியிடையே அன்புறவும் பாசப்பிணைப்பும் கூடும் போது, அவர்களை பிரியவிடாமல் கட்டி வைப்பது குடும்பம் - தொ.நூ 19:11-20, நீதி.த 14:1-10.
II. A. குடும்பம் திருமணத்தால் ஆரம்பமாகிறது :
1. மண ஒப்பந்தம் :
- யாக்கோபு – ராகேல் - தொ.நூ 29:18-20.
- தாவீது – மேராபு – 1சாமு 18:17.
- யோசேப்பு – மரியாள் - லூக் 1:26-27.
- மண ஒப்பந்தமானவனுக்கு சலுகை - இ.ச. 20:7.
2. திருமணம் :
- திருமணம் செய்து, குடும்பத்தை நல்ல முறையில் நடத்த வேண்டும் - 1திமொ 5:14.
- மணவறைப்படுக்கை மாசுறாமலிருக்க, திருமணத்தை உயர்வாக கருதுங்கள் - எபி 13:4.
3. திருமணக் கடமைகள் :
- கணவன் தன் மனைவியோடு கூடியிருப்பான் - தொ.நூ 2:24.
- மனைவியை விலக்கி விடாதே – மத் 5:32.
- கடவுள் இணைத்ததை, மனிதன் பிரிக்காதிருக்கட்டும் - மாற் 10:8-9.
- மனைவியும், கணவனைப் பிரிந்து வாழக் கூடாது – 1கொரி 7:10,11.
4. கடவுளோடு ஒப்பிடும் திருமண வாழ்வு :
- உன்னைப் படைத்தவரே உன் கணவர் - எசா 54:5.
- இளைஞன் கன்னிப்பெண்ணை மணப்பது போல், கடவுள் உன்னை மணந்து மகிழ்விப்பார் - எசா 62:5.
- முடிவில்லா காலத்துக்கு, உன்னோடு மண ஒப்பந்தம் செய்து கொள்வேன் - ஒசே 2:19,20.
- இறை அரசை, திருமண விருந்தோடு ஒப்பிடலாம் - மத் 22:2.
- மணமகன் இயேசுவோடு, ஆயத்தமானவர் நுழைவர் - மத் 25:10.
- ஆட்டுக்குட்டியின் மண விழாவுக்கு, மணவாட்டி ஆயத்தமாயிருக்கிறார் - வெளி 19:7.
B. குடும்ப அன்பு :
1. திருமண அன்பு :
- ஈசாக்கு, ரபேக்கா மீது அன்பு வைத்து, தாயின் கூடாரத்தில், தன் குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்தார் - தொ.நூ 24:67.
- யாக்கோபு, ராகேல் மேல் கொண்ட அன்பால், ஏழு ஆண்டுகள், அவருக்கு சில நாட்களாகவே பட்டது – தொ.நூ 29:20.
- பெண்கள் அனைவரிலும், எஸ்தரையே மன்னர் விரும்பினார் - எஸ்தர் 2:17.
- உன் மனைவியின் அன்பு, உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக – நீ.மொ 5:19.
- கணவர், தன் மனைவியை, தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செய்ய வேண்டும் - எபே 5:28.
- கணவர், தங்கள் மனைவியரை கொடுமைப்படுத்தாமல் அன்பு செய்யுங்கள் - கொலோ 3:19.
2. பெற்றோர் அன்பு :
- என் புதல்வியரையும், பேரப்பிள்ளைகளையும் முத்தமிட, நீ ஏன் என்னை அனுமதிக்கவில்லை? – லாபான் - தொ.நூ 31:28.
- யோசேப்புக்காக, தகப்பன் யாக்கோபு துக்கம் கொண்டாடினார் - தொ.நூ 37:34,35.
- யாக்கோபு, தன் இளைய மகனுக்காக பரிந்து பேசுகிறார் - தொ.நூ 42:38.
- யோசேப்பை கண்ட யாக்கோபு, பெருமகிழ்ச்சி கொண்டார் - தொ.நூ 46:30.
- தாவீது, தன் மகனுக்காக நோன்பிருந்து மன்றாடினார் - 2சாமு 12:16.
- தாவீது, தன் மகன் அப்சலோமை காண ஏங்கினார் - 2சாமு 13:39.
- அப்சலேமுக்கு தீங்கிழைக்காதபடி, தாவீது கேட்டுக்கொண்டார் - 2சாமு 18:5.
- யாயீர், தன் மகளுக்காக, இயேசுவிடம் பரிந்து பேசுகிறார் - மாற் 5:23.
- ஊதாரி மகனின் தந்தை, மகனை கட்டியணைத்து முத்தமிட்டார் - லூக் 15:20.
3. கணவன் மனைவி :
(i) கணவனின் கடமை :
- மனைவியை எலும்பின் எலும்பும், சதையின் சதையுமாக கணவன் நடத்த வேண்டும் - தொ.நூ 2:23.
- தன் தாய் தந்தையை விட்டு, தன் மனைவியோடு கணவன் இருப்பார் - தொ.நூ 2:24.
- திருமணமானதும், வீட்டில் இருந்து ஓர் ஆண்டுகாலம் கணவன் மனைவியை மகிழ்விக்க வேண்டும் - இ.ச. 24:5.
- இளமையில் மணந்த மனைவியோடு மகிழ்ந்திரு – நீ.மொ 5:18.
- உலக வாழ்வு வீண் என்றாலும், உனக்கு கிடைத்த அன்பு மனைவியோடு இன்புற்றிரு – ச.உ 9:9.
- கிறிஸ்து திருச்சபையை அன்பு செய்வது போல, கணவன் மனைவியை அன்பு செய்ய வேண்டும் - எபே 5:25.
(ii) மனைவியின் கடமை
- மனைவியர் கணவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் - எஸ்தர் 1:20.
- சோம்பேறியாக அல்லாமல், இல்லத்தின் அலுவல்களில் கருத்தாயிருப்பாள் - நீ.மொ 31:27.
- மனைவி கணவனிடமிருந்து பிரிந்து வாழலாகாது – 1கொரி 7:10.
- மனைவியர், தன் கணவருக்கு பணிந்திருக்க வேண்டும் - கொலோ 3:18.
- நம்பத்தக்கவராயும், புறங்கூறாதவராயும், சுறுசுறுப்பு உடையவராயும் மனைவியர் இருக்க வேண்டும் - 1திமொ 3:11.
- மனைவியர் கணவனுடன் பிள்ளைகளிடமும் அன்பு காட்ட வேண்டும் - தீத் 2:4,5.
- தூய நடத்தையால், கெட்ட கணவரை நல்வழிப்படுத்த வேண்டும் - 1பேது 3:1.
4. நல்ல ஆலோசனை :
- சூனாமித்தாள், தன் கணவனிடம் நல்ல ஆலோசனை கூறினாள் - 2அர 4:8-10.
- மனோவாகு தன் மனைவிக்கு நல்லாலோசனை கூறினாள் - நீதி.த 13:22.
- பெல்சாட்சர் மன்னனுக்கு மனைவி நல்ல அறிவுரை கூறினாள் - தானி 5:10-12.
- பிலாத்துவின் மனைவி, பிலாத்துவுக்கு நல்ல அறிவுரை கூறினாள் - மத் 27:19.
C. பெற்றோரின் கடமைகள் :
1. கற்பிக்க :
- இறை வார்த்தையை உன் பிள்ளைகளுக்கு பேசு - இ.ச. 6:7.
- திருச்சட்டங்களை பிள்ளைகளுக்கு விளக்கு - இ.ச. 6:20,21.
- பிடிவாதமுள்ள பிள்ளைகளை பெரியோர்களிடம், பெற்றோர் கூட்டி வந்து திருத்துவர் - இ.ச. 21:19.
2. நற்பயிற்சியளிக்க :
- நல் வழியில் நடக்க பிள்ளைகளை பழக்கு – நீ.மொ 22:6.
- தந்தையர், பிள்ளைகளுக்கு இறை பயிற்சி தருவர் - எசா 38:19.
- பெற்றோர் பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும் - புல 2:19.
- பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாமல் அவர்களை கண்டித்து திருத்தி வளர்க்க வேண்டும் - எபே 6:4.
- பிள்ளைகள் பணிவுடனும், மிகுந்த கண்ணியத்துடனும் வளர எல்லாம் செய்ய வேண்டும் - 1திமொ 3:4, 3:12.
3. திருத்தம் தர :
- கண்டித்து திருத்துக – நீ.மொ 13:24.
- திருத்தும் பருவத்தில் தண்டித்து திருத்து – நீ.மொ 19:18.
- திருத்துவதால், தீமையை பிள்ளையிடமிருந்து நீக்குவாய் - நீ.மொ 22:15.
- தண்டித்து திருத்துவதால், பாதாளத்துக்கு தப்புவிப்பாய் - நீ.மொ 23:13.
4. புத்தி சொல்லல் :
- ஆண்டவரைப் பற்றி, பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் எடுத்து கூறு - இ.ச. 4:9.
- ஆண்டவரைப்பற்றி, எல்லா வேளைகளிலும் பேசுங்கள் - இ.ச. 11:19.
- அறியாத பிள்ளைகளுக்கு, ஆண்டவரை பற்றி கூறுங்கள் - இ.ச. 31:13.
- பால் குடி மறக்கும் பருவத்திலிருந்தே பிள்ளைகளுக்கு புத்தி புகட்டும் - எசா 28:9.
D. பெற்றோரின் "மாதிரி" :
1. தீய முன் மாதிரி :
- அகசியா, தந்தை ஆகாபின் வழியில் தீமை செய்தான் - 1அர 22:52.
- தாயின் கொடுமதியால் அகசியா தீய வழி நடந்தான் - 2குறி 22:3.
- மூதாதையர் கற்றுத்தந்தபடி பாகாலை பின்பற்றினர் - எரே 9:14.
- தந்தையர், பின்பற்றிய பொய் தெய்வங்களை பிள்ளைகளும் பின்பற்றினார் - ஆமோ 2:4.
- அவள் தாய் சொல்லிக் கொடுத்தப்படி, யோவானின் தலையை மகள் கேட்டாள் - மத் 14:8.
2. நல்ல முன் மாதிரி :
- உன் தந்தை தாவீதைப் போல் நீதியோடு நட – 1அர 9:4.
- யோசேபாத் - தன் மூதாதை தாவீதின் வழியில் நடந்தார் - 2குறி 17:3.
- தந்தையின் வழிகளை விட்டு விடாது. ஆண்டவரின் பார்வையில் நேரியதைச் செய்தார் - 2குறி 20:32.
- தந்தை அமட்சியாவைப் போல், உசியா நடந்தான் - 2குறி 26:4.
3. பெற்றோரின் தவறுகள் :
- பிள்ளைகள் தவறு செய்த போது, தடுக்காத குற்றத்துக்கு குரு ஏலிக்கு தண்டனை – 1சாமு 3:13.
- சாமுவேலின் பிள்ளைகள், பொருளாசைக்கு உட்பட்டு கையூட்டு வாங்கினர் - 1சாமு 8:3.
- ஏன் இப்படி செய்கிறாய் என்று, தாவீது தன் பிள்ளை அந்தோணியாவை கண்டிக்கவில்லை – 1அர 1:6.
- தன் விருப்பம் போல் விடப்பட்ட பிள்ளைகள், பெற்றோருக்கு வெட்கத்தை வருவிப்பார் - நீ.மொ 29:15.
4. பெற்றோர் ஒரு சார்பு நிலை :
- ஈசாக்கு ஏசா மேலும், யாக்கோபு மேல் ரபேக்காளும் அன்பு கொண்டிருந்தனர் - தொ.நூ 25:28.
- யாக்கோபு, யோசேப்பை, மற்றெல்லா பிள்ளைகளை விட அதிகம் அன்பு செய்தார் - தொ.நூ 37:31.
- யோசேப்புக்கு அதிக சொத்தை யாக்கோபு கொடுத்தார் - தொ.நூ 48:22.
- வேலைக்காரிகளின் பிள்ளைகள் இறந்தாலும் பரவாயில்லை எனறு, யாக்கோபு அவர்களை முதல் வரிசையில் நிறுத்தினார் - தொ.நூ 33:2.
5. பெற்றோரின் பாவம், பிள்ளைகளை தொடரும் :
- பெற்றோரின் பாவங்களுக்காக தலைமுறை தோறும், கடவுள் தண்டனை வழங்குவார் - வி.ப. 20:5, 34:7.
- மூதாதையர் செய்த குற்றங்களுக்காக பிள்ளைகளுக்கு தண்டனை உண்டு – லேவி 26:39.
- ஆண்டவர், மூதாதையர் குற்றங்களுக்காக, பிள்ளைகளை தண்டிப்பார் - எண் 14:18.
- 40 ஆண்டுகள், உங்கள் பிள்ளைகள், உங்கள் பொருட்டு துன்புறுவர் - எண் 14:33.
- மூதாதையர் பொருட்டு பிள்ளைகளுக்கு போர்க்களம் - எசா 14:21.
- தந்தையரின் குற்றங்களுக்கான தண்டனை பிள்ளைகளுக்கு – எரே 32:28,29.
E. பெற்றோரின் உணர்வுகள் :
1. பெற்றோரின் அன்பு :
- ஆபிரகாம், தன் மகனுக்கு தனக்குரிய அனைத்தையும் கொடுத்தார் - தொ.நூ 24:36.
- யாக்கோபு, தன் மகன் யோசேப்புக்கு, அழகு வேலைப்பாடு மிகுந்த ஓர் அங்கியை செய்து கொடுத்தார் - தொ.நூ 37:3.
- காலேபு, தன் மகளுக்கு நீரூற்று உள்ள நிலத்தைக் கொடுத்தார் - யோசு 15:19.
- சாமுவேலின் தாய் அவனுக்கு ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை செய்து கொடுப்பார் - 1 சாமு 2:19.
- பிள்ளைகளுக்கு பெற்றோர் நன்கொடைகள் அளிப்பார் - மத் 7:11.
2. பெற்றோரின் மகிழ்ச்சி :
- ஞானமுள்ள மகன், தந்தையை மகிழ்விப்பான் - நீ.மொ 15:20.
- நேர்மையுள்ள பிள்ளையால், பெற்றோர் களிகூர்வர் - நீ.மொ 23:24.
- மகனே, நீ ஞானமுள்ளவனாகி என்னை மகிழச்செய் - நீ.மொ 27:11.
- ஞானத்தை விரும்புவோர், தந்தையை மகிழ்விப்பார் - நீ.மொ 23:3.
- திரும்பி வந்த மகனுக்காக, தந்தைக்கு மகிழ்ச்சி – லூக் 15:23.
3. பெற்றோரின் கவலை :
- அப்சலோமுக்காக தாவீது கதறல் - 2சாமு 18:33.
- அறிவற்ற மக்களால், தாய்க்கு துயர் - நீ.மொ 10:1.
- மதிகேடரை பெற்றவர், கவலைக்குள்ளாவார் - நீ.மொ 17:21.
- மதிகெட்ட மகனால் தாய்க்கு துயரம் - நீ.மொ 17:25.
- மதிகெட்ட மகனால் தந்தைக்கு கேடு – நீ.மொ 19:13.
- பெற்றோரை கொடுமைப்படுத்தும் மகன், அவர்களுக்குத் துயரம் தருவான் - நீ.மொ 19:26.
- ஊதாரிகளோடு சேர்ந்த மகன், தந்தைக்கு கவலை தருவான் - நீ.மொ 28:7.
- விருப்பம் போல் விடப்பட்ட பிள்ளையால், பெற்றோருக்கு கவலை – நீ.மொ 29:5.
4. பெற்றோரின் அக்கரை :
- சகோதரரை விசாரித்து வர, யோசேப்பை யாக்கோபு அனுப்பினார் - தொ.நூ 37:14.
- சவுலைக் காணாததால், பெற்றோர் பாரப்பட்டனர் - 1சாமு 10:21.
- தாவீது அரசன், அப்சலோமின் நலம்பற்றி அக்கரை கொண்டு விசாரித்தார் - 2சாமு 18:29.
- மொர்தொக்காய் ஒவ்வொரு நாளும், எஸ்தரின் நலம்பற்றி விசாரித்து அறிந்து வந்தார் - எஸ்தர் 2:11.
F. பிள்ளைகள் :
1. கடவுளின் கொடை :
- யாக்கோபு, தன் பிள்ளைகள் கடவுள் கருணையுடன் அருளிய கொடை என்று, ஏசாவுக்கு சொன்னார் - தொ.நூ 33:5.
- கடவுள் தந்த மைந்தர்கள் இவர்கள் என்று யோசேப்பு, தன் பிள்ளைகளை யாக்கோபுக்கு காட்டினார் - தொ.நூ 48:9.
- ஆபிரகாமுக்கு நான் ஈசாக்கை அளித்தேன் என்று, கடவுள் கூறினார் - யோசு 24:3.
- மலடிக்கு கடவுள் தாய்மைப்பேறு அருள்கிறார் - தி.பா 113:9.
- பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம் - தி.பா 127:3.
- ஆண்டவர் எனக்கு அருளிய குழந்தைகள் – எசா 8:18.
2. உயர்வாக கருதப்பட்டனர் :
- பிள்ளைகள், வீரரின் கையிலுள்ள அன்புக்கு ஒப்பானவர் - தி.பா 127:4,5.
- பிள்ளைகள், ஒலிவ கன்றுகள் போல் சூழ்ந்திருப்பர் - தி.பா 128:3.
- முதியோருக்கு பேரப்பிள்ளைகள் மணிமுடி போன்றவர் - நீ.மொ 17:6.
- விண்ணரசு சிறுபிள்ளைகளுக்குரியது – மத் 19:4.
3. பிள்ளைகள் தாய் தந்தையை போற்ற பிறந்தவர் :
- தாய் தந்தையை போற்று, நீடிய வாழ்வடைவாய் - வி.ப. 20:12.
- தாய் தந்தைக்கு அஞ்சுங்கள் - லேவி 19:3.
- தாய் தந்தையை பழிக்கிறவர் சபிக்கப்படுக - இ.ச. 27:16.
- பெற்றோரின் நற்பயிற்சியை தள்ளிவிடாதே – நீ.மொ 1:8.
- பெற்றோரை சபிக்கிறவனின் விளக்கு, இருளில் அணையும் - நீ.மொ 20:20.
- பெற்றோரை பழிக்கிறவர்களின் கண்களை கழுகு தின்னும் - நீ.மொ 30:17.
- பெற்றோரை சபிப்போர் கொல்லபட வேண்டும் - மத் 15:4.
- பெற்றோரை மதிப்பதே, வாக்குறுதியை உள்ளடக்கிய கட்டளை – எபே 6:2.
4. நல்ல பிள்ளைகளுக்கு உதாரணம் :
- யோசேப்பு – தன் குடும்பத்தாரை பேணிக்காத்தார் - தொ.நூ 47:12.
- தாவீது – மோவாபு மன்னனிடம் பெற்றோரை ஒப்படைத்தார் - 1சாமு 22:3-4.
- சாலமோன் - சாலமோனின் அரியணைக்கு அருகே, தாய்க்கும் இருக்கை போடப்பட்டது – 1அர 2:19.
- எலிசா – நல்ல தந்தையிடம், விடைபெற அனுமதி கேட்டார் - 1அர 19:20.
- யோனதாபின் பிள்ளைகள் - பெற்றோருக்கு பணிந்து நல்லொழுக்கத்தை கடைபிடித்தனர் - எரே 35:8.
- இயேசு – பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார் - லூக் 2:51.
5. பிள்ளைகளுக்குரிய கீழ்ப்படிதல் :
- பிள்ளாய், பெற்றோரின் கட்டளையை கடைபிடி – நீ.மொ 6.20.
- என் பிள்ளையே! என் கட்டளைகளை, செல்வம் என போற்று – நீ.மொ 7:1.
- பிள்ளைகள் பெற்றோருக்கு பணிந்திருங்கள் - எபே 6:1, கொலோ 3:20.
6. குடும்ப ஜெபத்தில் :
- குடும்பமாக யூதா குலத்தவர் ஆண்டவர் திருமுன் நின்றனர் - 2குறி 20:13.
- எஸ்றா நடத்திய ஜெப ஆராதனையில், மக்கள் குடும்பமாக பங்கேற்றனர் - எஸ்ரா 8:21.
- அன்று இஸ்ராயேலர் குடும்பமாக கூடி ஜெபித்தனர் - நெகே 12:43.
- இயேசுவுக்கு ஓசான்னா பாடும்போது, சிறு பிள்ளைகளும் சேர்ந்து கொண்டனர் - மத் 21:5.
7. கெட்ட பிள்ளைகள் :
- பெற்றோரை அடிக்கிறவர், கொல்லப்பட வேண்டும் - வி.ப. 21:15.
- பெற்றோரை சபிக்கிறவர் கொலை செய்யப்பட வேண்டும் - லேவி 20:9.
- பிடிவாதமுள்ள பிள்ளையை தலைவர்களிடம் ஒப்படை - இ.ச. 21:18.
- தங்கள் பிள்ளை, பெருந்தீனிக்காரன், முரட்டுத்தனம் உள்ளவன், சொல் கேட்பதில்லை. குடிவெறியன் என அவர்களிடம் கூறவும் - இ.ச. 21:20.
- தீய பிள்ளையை, மக்கள் கல்லெறிந்து கொல்லட்டும் - இ.ச. 21:21.
- பெற்றோரின் பொருளை திருடுகிறவன், கொள்ளைக்காரன் - நீ.மொ 28:24.
- தாயை வாழ்த்தாதவர், கெட்ட பிள்ளைகள் - நீ.மொ 30:11.
8. உதவும் பிள்ளைகள் :
- சாமுவேல் என்னும் சிறுவன் ஆண்டவர் முன் ஊழியம் செய்தான் - 1சாமு 2:18.
- தாவீதுக்கு உதவ, யோனத்தானுக்கு சிறுவன் உதவி சிறுவன் உதவி செய்தான் - 1சாமு 20:36.
- நாமானின் நோய்தீர, யூத சிறுமி உதவினாள் - 2அர 5:2,3.
- யோவாசு என்னும் 7 வயது சிறுவன், நாற்பது ஆண்டுகள் யூதாவை ஆண்டார் - 2குறி 24:1.
- தந்தையின் அலுவலில் ஈடுபட்டார் சிறுவன் இயேசு – லூக் 2:49.
- இயேசுவின் ஊழியத்துக்கு உதவிய சிறுவன் - யோவா 6:9.
9. கேலி செய்யும் சுட்டி பிள்ளைகள் :
- எலிசாவை கேலி செய்த சிறுவர் - 2அர 2:23.
- சிறுவர்களும் என்னை ஏளனம் செய்கின்றனர் - யோபு 19:18.
- சிறுவர் முதியோரை அவமதிப்பார் - எசா 3:5.
10. பிள்ளைகளுக்கான வாக்குத்தத்தம் :
- நீடிய நாட்கள் நலமுடன் வாழ்வாய் - இ.ச. 5:16.
- ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார் - தி.பா 27:10.
- நற்பேறு பெறுவீர்கள் - நீ.மொ 8:32.
- ஆட்டுக்குட்டிகளை அவர் தூக்கி சுமப்பார் - எசா 40:11.
- சிறு பிள்ளைகளுக்கு இறையரசு உரியது – மாற் 10:14.
- வாக்குறுதிகள் உங்கள் பிள்ளைகளுக்கும் உரியது – தி.தூ 2:39.
- நலம் பெறுவாய், மண்ணுலகில் நீடுழி வாழ்வாய் - எபே 6:2.
11. பெற்றோருக்கு பிரியாமான பிள்ளைகள் :
- தந்தை ஆபிரகாமின் விசுவாசத்துக்காக, சாகத்துணிந்த மகன் ஈசாக்கு – தொ.நூ 22:7.
- தந்தையின் பொருத்தனைக்காக, சாகத்துணிந்த இப்தாவின் புதல்வி – நீதி.த 11:36.
- ஆலயத்தில் வளர்ந்த சிறுவன் சாமுவேல் அனைவருக்கும் பிரியமுள்ளவனாயிருந்தான் - 1சாமு 2:26.
- சிறுவன் யோவான் தெய்வ பிள்ளையாக வளர்ந்தார் - லூக் 1:80.
- வெளிவேடமற்ற நம்பிக்கையுடைய சிறுவன் திமோத்தேயு இருந்தார் - 2திமொ 1:5.
- திருச்சட்ட நூலை, குழந்தையிலேயே கற்றார் திமோத்தேயு – 2திமொ 3:15.
12. பிள்ளைகளுக்கு பெயரிடல் :
- ஆதாம் தம் மகனுக்கு சேத் என்று பெயரிட்டான் - தொ.நூ 4:25.
- இலாமேக்கு தன் மகனுக்கு நோவா என்று பெயரிட்டான் - தொ.நூ 5:29.
- ஆபிரகாம் தன் மகனுக்கு ஈசாக்கு என்று பெயரிட்டார் - தொ.நூ 21:3.
- ராகேல் தம் மகனுக்கு நப்தலி என்று பெயரிட்டார் - தொ.நூ 30:8.
- யோசேப்பு, தலைமகனுக்கு மனாசே என்று பெயரிட்டார் - தொ.நூ 41:51.
- பார்வோனின் மகள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டார் - வி.ப. 2:10.
13. பிள்ளைகளை தத்தெடுத்தல் :
- ஆபிரகாம், தனக்கு பிள்ளையில்லாததால், தன் வேலைக்காரனை தத்தெடுப்பதாக கடவுளிடம் கூறினார் - தொ.நூ 15:3.
- யோசேப்பின் இரு புதல்வர்களையும், யாக்கோபு தத்தெடுத்தார் - தொ.நூ 48:5.
- மோசேயை பார்வோனின் மகள் தத்தெடுத்தார் - வி.ப. 2:10.
- மார்தொக்காய், தன் சகோதரனின் மகள் எஸ்தரை தத்தெடுத்தார் - எஸ்தர் 2:7.
14. பிள்ளைகளை முன்னறிவிப்பு :
- இஸ்மாயேலின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – தொ.நூ 16:11.
- ஈசாக்கின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – தொ.நூ 18:10.
- சிம்சோனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – நீதி.த 13:13.
- சூனாமித்தாளுக்கு பிள்ளை பிறப்பதாக முன்னறிவிக்கப்பட்டது – 2அர 4:16.
- யோசிபா அரசனின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – 1அர 13:2.
- எம்மானுவேலின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது - எசா 9:6.
- இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – மத் 1:21.
- யோவானின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டது – லூக் 1:13.
15. பிள்ளைகளின் பிறப்புரிமை (தலைமகன் உரிமை)
- ஏசாவின் தலைமகனுரிமையை அவன் விற்றான் - தொ.நூ 25:33.
- யாக்கோபின் மகன் ரூபன், தலைமகன் உரிமை பெற்றான் - தொ.நூ 43:33.
- தலைச்சன் உரிமையை, உரியவருக்கு தரவேண்டும் - இ.ச 21:16.
- யோசபாத்து, யோராமுக்கு தலைமகனுக்குரிய அரசை அளித்தார் - 2குறி 21:3.
G. குடும்ப பிரச்சனைகள் :
- சாராளை, பணிப்பெண் ஆகார் தான் கருவுற்றிருப்பதை அறிந்து இழிவாக பேசினாள் - தொ.நூ 16:5.
- ஈசாக்கு, ரபேக்காளும், மருமக்களால் மனக்கசப்பு அடைந்தார் - தொ.நூ 26:34,35, 27:46.
- தந்தையிடமிருந்து, யாக்கோபு பெற்ற ஆசியை முன்னிட்டு, ஏசா அவன் மீது வர்மம் கொண்டான் - தொ.நூ 27:41.
- யோசேப்பை, யாக்கோபு அதிகம் நேசிக்கிறார் என்று கண்டு சாராதவர், அவரை வெறுத்தனர் - தொ.நூ 37:4.
- மோசே, எத்தியோப்பிய பெண்ணை மணந்ததால், ஆரோனும் மிரியாமும் அவருக்கெதிராக பேசினர் - எண் 12:1.
- தாவீது, பேழைக்கு முன்பு குதித்து ஆடியதால், மனைவி மீக்கால் அவரை தன் உள்ளத்தில் வெறுத்தாள் - 2சாமு 6:16.
- உன் குடும்பத்திலிருந்தே தீங்கை வருவிப்பேன் - 2சாமு 12:11.
- வஸ்தி கீழ்படியாததால், அகஸ்வேர் மன்னன், அவளை வெறுத்து ஒதுக்கினான் - எஸ்தர் 1:12.
H. குடும்பத்துக்கு பகைவன் :
1. விபச்சாரம் :
- விபச்சாரம் செய்யாதே – வி.ப. 20:14, மத் 5:27,28.
- அடுத்தவன் மனைவியோடு உடலுறவு கொண்டால், இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் - லேவி 20:10.
- காமுகனின் கண், கருக்கலுக்காய் காத்திருக்கும் - யோபு 24:15.
- பரத்தமையில் ஈடுபட்டால், மனைவியை விலக்கு – மத் 19:9.
- கணவன் இருக்கும் போது, பெண் வேறொருவரோடு வாழ்ந்தால், அவள் விபச்சாரி – உரோ 7:3.
- பரத்தமையில் ஈடுபடுவோருக்கு, இறை அரசு இல்லை – 1கொரி 6:9.
- கற்பு நெறி இழந்த பெண்களை சுற்றியே வருவர், சாபத்துக்குள்ளானவர் - 2பேது 2:14.
2. பலதாரம் :
- இலாமேக்கு, இரண்டு பெண்களை மணந்து கொண்டார் - தொ.நூ 4:19.
- ஆபிரகாம், ஆகாரை மனைவியாக்கினார் - தொ.நூ 16:3.
- ஏசா நாற்பது வயதில் யூதித்தையும், பாசமத்தையும் மணந்தார் - தொ.நூ 26:34.
- யாக்கோபு, லேயாள், ராகேல் என்று இருவரை மணந்தார் - தொ.நூ 29:28.
- கிதியோனுக்கு பல மனைவியர் இருந்தனர் - நீதி.த 8:30.
- எல்கானாவுக்கு அன்னா, பெனனா என்ற இரு மனைவியர் இருந்தனர் - 1சாமு 1:2.
- சாலமோனுக்கு பல மனைவியர் இருந்தனர் - 1அர 11:1-3.
3. பலதாரத்துக்கு தடை :
- மனம் ஆண்டவரை விட்டு அகலாதிருக்க, பல மனைவியர் ஆகாது - இ.ச. 17:17.
- இளமையில் மணந்த மனைவிக்கு கணவன் நம்பிக்கை துரோகம் செய்யலாகாது – மலா 2:15.
- ஒரு மனைவி கொண்டவராயிருங்கள் - 1திமொ 3:2, தீத் 1:6.
4. வைப்பாட்டிகள் :
- கிதியோனுக்கு, வைப்பாட்டிகள் இருந்தனர் - நீதி. 8:31.
- தாவீதுக்கு, பல வைப்பாட்டிகள் இருந்தனர் - 2சாமு 5:13.
- சாலமோனுக்கு 300 வைப்பாட்டிகள் இருந்தனர் - 1அர 11:3.
- ரகபேயாம் 60 வைப்பாட்டிகளை கொண்டிருந்தார் - 2குறி 11:21.
5. விவாகரத்து :
- தகாத வாழ்க்கையின் நிமித்தம் விவாகரத்து - இ.ச. 24:1.
- அன்னிய பெண்களை விவாகரத்து செய்தனர் - எஸ்ரா 10:3.
- மணவிலக்கு சான்றிதழ் கொடுத்து விவாகரத்து – மத் 5:31.
- பொறுமையும், ஸ்னேகமும், தெய்வபயமும் குறைந்த இடங்களில், விவாகரத்து சாதாரணமாகப் பேசப்படுகிறது. இது, அலகையின் அரசுக்கு இயல்பானது. ஆனால், இறை அரசின் பங்காளிகளுக்கு, விவாகரத்து நடப்பது குறைவு.
I. குடும்ப மகிழ்ச்சிக்கு காரணங்கள் :
- மனைவி மீது, கணவன் கொண்ட அன்பால் மகிழ்ச்சி – தொ.நூ 24:67. (ஈசாக்கு, ரபேக்கா)
- சாராளுக்கு, குழந்தை பிறந்ததால் குடும்பத்தில் மகிழ்ச்சி – தொ.நூ 21:6.
- பிள்ளைகள் வீட்டில் கூட இருக்கும் போது மகிழ்ச்சி – யோபு 29:5, தி.பா 127:4,5.
- மனைவி, தாய் என்ற அந்தஸ்தை பெறும்போது மகிழ்ச்சி – நீ.மொ 31:28.
1. குடும்ப ஆத்மீகம் :
- நானும் என் குடும்பமும் கர்த்தரையே செவிப்போம் - யோசுவா கூறினார் - யோசு 2:15.
- யோபு, தன் பிள்ளைகளுக்காக, நாள்தோறும் எரிபலி ஒப்புக்கொடுத்தார் - யோபு 1:5.
- குடும்பம் கூடி, கடவுளின் வல்ல செயலை பேச வேண்டும் - லூக் 8:39.
- மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து, அவர் சொல்வதை கேட்டாள் - லூக் 10:39.
- தாம் சந்தித்த ஆண்டவரைப் பற்றி, மற்றவர்க்கும் எடுத்துக் கூற வேண்டும் - யோவா 1:41.
- லீதியாளும், அவள் வீட்டாரும் திருமுழுக்கு பெற்றனர் - தி.தூ 16:15.
- சிறைக் காவலன், குடும்பமாக திருமுழுக்கு பெற்றான் - தி.தூ 16:33.
2. இறைப்பற்றுடைய தந்தையர் :
- ஆபிரகாம் இறைப்பற்றுடையவர் என்று கடவுள் கண்டார் - தொ.நூ 18:19.
- யாக்கோபு, தன் வீட்டாரை தூய்மைப்படுத்தினார் - தொ.நூ 35:2.
- மனோவாகு, கடவுளின் ஆலோசனை கேட்டு வேண்டினார் - நீதிபதி 13:8.
- தாவீது, இறுதி நாளில் சாலமோனுக்கு இறைவழி காட்டினார் - 1அர 2:1-4.
- தந்தை சக்கரியா, தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் - லூக் 1:67.
- கொர்னேலியு, இறைப்பற்றுள்ளவர், ஜெபிப்பவர் - தி.தூ 10:2.
3. இறைப்பற்றுள்ள தாய்மார் :
- சாராவை கடவுள் சிரிக்க வைத்ததாக கூறினாள் - தொ.நூ 21:6.
- அன்னா, மகனை ஆண்டவருக்கு ஒப்புகொடுப்பதாக சொன்னாள் - 1சாமு 1:22.
- எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் - லூக் 1:41..
- மரியாள், தாழ்நிலையில் நின்றதால் உயர்வடைந்தார் - லூக் 1:46-55.
4. பெற்றோரின் ஜெபம் :
- ஆபிரகாம், கடவுளின் இஸ்மாயிலுக்காக ஜெபித்தார் - தொ.நூ 17:18.
- தாவீது, தன் மகனுக்காக நோன்பிருந்து வேண்டினார் - 2சாமு 12:16.
- தாவீது, சாலமோனுக்காக ஜெபித்தார் - 1குறி 29:19.
- பேய்பிடித்த மகனின் தந்தை, இயேசுவிடம் ஜெபித்தார் - மத் 17:15.
- கனானேயப் பெண், தன் மகளுக்காக ஜெபித்தார் - மாற் 7:26.
மண்ணுலகில், பிளவு உண்டாக்கவே வந்தேன் ???
jeniferrayan, madurai
1/5/2014, Thursday
அய்யா , 49. பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன், அது அப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். 51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தை அல்ல. பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன். 52. எப்படியெனில், இது முதல் ஒரே வீட்டில் ஐந்து பேர் பிரிந்திருப்பார்கள், இரண்டு பேருக்கு விரோதமாய் மூன்று பேரும் மூன்று பேருக்கு விரோதமாய் இரண்டு பேரும் பிரிந்திருப்பார்கள். 53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். லூக்கா – 12:49,51,52,53 34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள். சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன். 35. எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். மத்தேயு – 10:34,35 விளக்கம் தாருங்கள் பேஸ்புக் இணைய தளத்தில் முஸ்லீம் நபர்கள் இந்த வசனத்தை சொல்லி நக்கல் அடிக்கிறார்கள் தயவுசெய்து சொல்லுங்கள்.
பதில்
அன்பு சகோதரரே, தங்கள் கேள்விக்கான பதிலை, சுருக்கமாக கீழே தருகிறோம்.
இயேசு கூறிய வார்த்தைகள் :
- மண்ணுலகில், தீயை மூட்டவே வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டு இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம் - லூக்12:49
- மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை – லூக்12:51
- மண்ணுலகில், பிளவு உண்டாக்கவே வந்தேன் - லூக்12:51.
- இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும், மூவருக்கு எதிராக ஐவரும் பிரிந்திருப்பர். – லூக்12:52.
- தந்தை மகனுக்கும்,மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.
- உலகுக்கு அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன் -மத்10:34.
- ஒருவருடைய பகைவர் அவருடைய வீட்டில் உள்ளவரே ஆவர் - 10:36.
சத்தியத்தை ஏற்றலும்- விளைவும் :
- மேற்சொன்ன வசனங்கள், ஒரு சத்தியத்தை ஏற்பது அல்லது புறக்கணிப்பதன் “விளைவு” என்ற அடிப்படையிலேயே எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இயேசு போதித்த "சத்தியம்" மேற்சொன்ன வசனங்களைத் தொடர்ந்து வருவதைப் பார்க்கிறோம்.
- என்னை விட, தம் தந்தையிடமோ, தாயிடமோ "மிகுந்த அன்பு" கொண்டுள்ளோர் என்னுடையோர் என கருதப்படத் தகுதியற்றோர் - மத்10:37.
- என்னைவிடத் தம் மகனிடமோ மகளிடமோ "மிகுதியாய் அன்பு" கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
- தன் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் "என்னுடையோர்" எனக் கருதப்படத் தகுதியற்றோர்.
- தம்உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். "என்பொருட்டு" தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்.
மனித மனத்தின் சாய்வும் - தீர்மானமும் :
- இரண்டு வேறுபட்ட காரியங்கள், ஒரு மனிதனுக்கு முன் நிற்கும் போது, அவனது மனம் எதன் பக்கம் "சாய்ந்துள்ளதோ" அதன்படியே அவனுடைய "தீர்மானமும்" இருக்கும்.
- ஒருவரின் "தீர்மானத்தின்" அடிப்படையிலேயே, மேற்சொன்ன பிரிவு, அமைதியின்மை, வாள், நெருப்பு, போன்ற விளைவுகள் உருவாகின்றன.
இயேசுவின் உபதேச சத்தியங்களும் - இயேசுவும் :
- இயேசுவும், இயேசுவின் உபதேசங்களும் ஒன்றே.
- இயேசுவை ஏற்றுக்கொள்வது என்பது, அவரது உபதேசத்தை ஏற்றுக்கொள்வது ஆகும்.
- இயேசுவை சந்திக்கிற ஒருவர் இரண்டு முடிவுகளுக்கு மத்தியில் நிற்கிறார்.
- ஒன்று அவரை ஏற்றுக்கொள்வது, மற்றொன்று அவரை புறக்கணிப்பது.
ஏற்றுக்கொள்வது அல்லது புறக்கணிப்பதும் – மனித “பற்றும்” :
- ஒருவருடைய “தீர்மானம்” அவர் ஒன்றில் வைத்திருக்கும் “பற்றின்” அடிப்படையிலேயே அமைகிறது.
- இயேசுவை ஒருவர் சந்திக்கும் போது, அவரது எதிர்புறம், அவர் மற்றொன்றையும் சந்திக்கிறார்.
- அதுவே உலகம், பிசாசு, சரீரம் என்ற எதிர்சக்திகள்.
- பொதுவாக, இயேசுவை சந்திக்கும் முன் ஒருவர்,உறவுகள், உடமைகள், ஆசைகள் போன்றவற்றால் கவரப்பெற்று, உலகம், பிசாசு, சரீரத்தில் பற்றுக்கொண்டிருப்பார்.
- இந்நிலையில், இயேசுவை ஒருவர் பற்றிக்கொள்ள வேண்டுமென்றால், மேற்சொன்ன பற்றுக்களை ஒருவர் “துறந்து” தான் ஆகவேண்டும்.
- இந்த “பற்றறுத்தலின்” விளைவே, மேற்சொன்ன, பிரிவு, நெருப்பு, வாள் போன்றவை.
இயேசுவின் பொருட்டு – துறவு :
- என் பொருட்டும், நற்செய்தியின் பொருட்டும்,
- “வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் - இம்மையிலும், மறுமையிலும் கைமாறு பெறுவர்” - மாற் 10:29,30.
- இறையாட்சியின் பொருட்டு,
- “வீட்டையோ, மனைவியையோ, சகோதரர் சகோதரிகளையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ, விட்டுவிட்டவர் எவரும் - இம்மையிலும் மறுமையிலும் கைமாறு பெறுவர்” - லூக் 18:29,30.
- என் பொருட்டு,
- “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும், தன்னலம் துறந்து, தன் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும், தம் உயிரைக் காத்துக் கொள்ளவிரும்பும் எவரும் அதை இழந்துவிடுவார். என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்” - லூக் 9:23,24.
இரண்டு ஈர்ப்புக்களின் மத்தியில் மனிதன் :
- மேற்சொன்ன, இயேசுவின் உபதேச சத்தியங்களின் அடிப்படையில், மனிதன் இரண்டு பெரும் “ஈர்ப்புக்களுக்கு” மத்தியில் நிற்கிறான்.
- இயேசு – (என்பொருட்டு, நற்செய்தியின் பொருட்டு, இறையாட்சியின் பொருட்டு),
- உறவுகள், உடமைகள்,ஆசைகளால் சூழப்பெற்ற, உலகம், பிசாசு, சரீரம்.
தீர்மானமும் - பிரச்சனையும் :
- இங்கே, தீர்மானம் அதாவது OPTION என்று வரும் போது, ஒன்றைப் “பற்றிக்” கொண்டு, மற்றதை “துறந்து” அல்லது “பிரிந்து” தான் ஆகவேண்டும்.
- இயேசுவை சந்திக்கும் போது, ஒருவர் இரண்டு வேறுபட்ட சக்திகளை சந்திக்கிறார் என்று பார்த்தோம்.
- அதாவது,
- கடவுள் X அலகை,
- தர்மம் X அதர்மம்,
- உண்மை X பொய்,
- அன்பு X பகை,
- பழி X மன்னிப்பு,
- ஆத்திரம் X பொறுமை,
- பரிசுத்தம் X மாசு
- இவற்றை இரண்டு “வழிகள்” என்று காண்கிறோம்.
- ஒன்று “கடவுள் வழி” மற்றொன்று “அலகை வழி” அல்லது “உலக வழி”.
- இதில், சிலர் “கடவுள் வழிகளை” பற்றி நிற்பர்.
- வேறு சிலர் “உலக வழிகளை” பற்றி நிற்பர்.
ஓர் ஆளைப்பற்றி நிற்பதும் - அவர் வழிகளைப் பற்றி நிற்பதும் :
- ஒரு குடும்பம் என்று வரும்போது, அங்கே ஆட்களைப் பற்றி நிற்கும் நிலையைப் பார்க்கிறோம்.
- இங்கே, “ஆளா அல்லது வழியா” என்று பார்க்கும் போது, சிலர் குடும்பத்திலுள்ள ஆளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார், மற்றவர்கள் பின்பற்றும் வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்.
- ஆளைப் பற்றி நிற்பவர், வழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள்.
- வழிகளைப் பற்றி நிற்பவர், ஆளுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்.
- இவ்வாறு, “இயேசுவின் வழிகளை” பின்பற்றுபவர், “உலக வழிகளை” பின்பற்றாதவரை பிரிந்து தான் ஆக வேண்டும்.
- இங்கே, உறவா, உடமையா, ஆசையா X இயேசுவா என்று பார்க்கும் போது, இயேசுவைப் பற்றிக்கொண்டவர், உறவையும், உடமையையும், ஆசைகளையும் துறந்து, அல்லது பிரிந்து தான் ஆக வேண்டும்.
பிரிவும் துன்பமும் :
- இவ்வாறு உண்டாகும் பிரிவு , சில வேளைகளில் துயரத்தைத் தரும், வேதனையைத் தரும், போராட்டங்களைத் தரும்.
- இதைக் குறித்தே இயேசு, பிரிவு, பிளவு, வாள், நெருப்பு என்று கூறினார்.
பழைய ஏற்பாட்டில் முன்னுதாரணம் - வி.ப 32:26-29 :
- மோசே திருச்சட்டத்தைப் பெற்றுக் கொள்ள, மலைக்குச் சென்றார்.
- அவர் திரும்பி வர, காலம் தாழ்த்தவே, மக்கள் பொறுமை இழந்தனர்.
- தங்களுக்கென்று ஒரு கன்றுக்குட்டி செய்து வழிபட்டனர்.
- இதைக்கண்ட மோசே, வருத்தமுற்றார், சினமுற்றார்.
- கடவுளைப் புறக்கணித்து, கன்றுகுட்டியை வணங்கியதால் மக்கள் பெரும் பாவம் செய்தனர்.
- ஆனாலும், கூட்டத்தில் எல்லாரும் இந்த பாவம் செய்யவில்லை.
- கடவுளைப் பற்றி நின்றவர்களும் - கன்றுக்குட்டியை பற்றி நின்றவர்களுமாக ஒரு “கலப்படக் கூட்டமே” மோசேக்கு முன் நின்றது.
- அப்போது மோசே இவ்வாறுகூறினார்:
- (26) “ஆண்டவரது பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்” என்றார். லேவியர் அனைவரும் அவரிடம் வந்து கூடினர்.
- (27) அவர் அவர்களை நோக்கி: “இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே: ஒவ்வொருவனும் தன் வாளை இடையில் செருகிக்கொண்டு, பாளையத்திற்குள் சுற்றிவந்து, வாயில்வாயிலாகக் கடந்து சென்று தன் சகோதரனையும், தன் நண்பனையும், தனக்கு அடுத்திருப்பவனையும் வெட்டி வீழ்த்த வேண்டும்” என்றார்.
- (28) மோசேயின் வாக்குக் கிணங்க லேவியர் செயல்பட்டதால் அந்நாளில் மக்களுள் ஏறத்தாள மூவாயிரம் பேர் மடிந்தனர்.
- (29) மோசே “புதல்வன், சகோதரன் என்று பாராது நீங்கள் செயல்பட்டு அவருக்காக இன்று உங்களை அர்ப்பணம் செய்து கொண்டடீர்கள். இதை முன்னிட்டு ஆண்டவர் உங்கள் மேல் ஆசி பொழிற்துள்ளார்” என்றார்.
பிரிவும் துன்பமும் - ஏற்பு அல்லது புறக்கணிப்பதின் விளைவே :
- மேற்கண்ட நிகழ்ச்சியில் இந்த பாடம் தெளிவாகிறது.
- கடவுள் பக்கம் நின்றவர்கள், குடும்பத்தை, உறவுகளை, உடமைகளை, துணிவோடு துறக்கும் அல்லது பிரியும் முறையை பார்த்தோம்.
- இதனால் ஏற்பட்ட, “வாள்”, “நெருப்பு”, “அமைதியின்மை” “பிளவு” அனைத்தையும் கண்டோம்.
கி.மு – கிபி :
- இயேசு ஒரு “சகாப்தம்”.
- அவரது வருகையினால் உலகம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
- இதில், இயேசுவின் பக்கம் சேர்பவர்களுக்கும் - உலகத்தின் பக்கம் சேர்பவர்களுக்கும் இடையே உண்டாகும் “உறவு அழுத்தமே” நாம் கண்ட வசனங்களின் விளக்கம்.
- நன்றி http://www.catholicpentecostmission.in/QuestionAnswer.html
Subscribe to:
Posts
(
Atom
)

